திருவிழாக்கள் எப்போதும் வருவதில்லை . - நீயும் வந்தாய்
சில நாட்கள் பூத்துறல் சில நாட்கள் மௌன சந்தோசம்
கொலுசு சத்தம் சில நாட்கள் கோப பார்வை சில நாட்கள்
புன்னகை சில நேரம் , புயல் மழை சில நேரம்
என் கனவுகள் உனக்கு புரியாமல் இல்லை- நீயே கலைப்பாய்
என்று தெரியாமல் உன்னிடம் பாதுகாத்தேன் ,
எல்லா நியாயங்களும் உன்னிடம் - என் ஆதங்கங்கள் யாரிடம்?
அனைத்திற்கும் விடை சொல்வாயே- என் கேள்விகளை
எங்கே தொலைத்தாய்?
எல்லா காலத்திலும் நான் காத்திருப்பேன் ,
எப்போதாவது விடை கிடைக்கும் என்று !!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment