Sunday, August 21, 2011

பாத்து நாட்களுக்கு முன்பு சங்கரன் கோயில் தபசு கோயிலுக்கு வேண்டுதலுக்கு சென்றிருந்தோம் .நான் , என் மனைவி, என் சின்ன அண்ணி , மற்றும் பெரிய அண்ணி , கூடவே எனது திருப்பூர் நண்பர் ஜெயபாலன் மற்றும் அவர் மனைவி விஜயா என்று மொத்தம் ஆறு பேர் . எனது அண்ணன் ( சின்ன அண்ணியின் கணவர் என் உடன் பிறந்த மூத்த சகோதரர் . அவருக்கு ரயில்வே உத்தியோகம் . லீவு இல்லை , எனவே சுலபமாக கழண்டு கொண்டார். பெரிய அண்ணி கணவர் உடன் இல்லை, அவருடன் 22 ஆண்டுகளாக இல்லை .
எல்லோரும் திட்டமிட்டபடி அதி காலை கிளம்புவதாக உறுதி செய்து கொண்டு தூங்க போகவில்லை . பேச ஆரம்பித்தோம் . என்ன பேசினோம் என்பதை சொல்வதற்கு இல்லை . வழக்கம் போல் மிக தாமதமாக கிளம்பினோம்.

Friday, April 1, 2011

தேதி நினைவில்லை - நம் வழக்கு
நீதி மன்றம் படியேறிய தினம்
என் நினைவடுக்குகளில் தேங்க வில்லை - உன்
ஆவேச குற்றசாட்டுகள்- என் ஊதாரி தனத்தால்
சேமிக்கவில்லை உன் உள்ள குமுறல்களை !!!
கண்களில் வழியும் நெருப்பை கேள்வியாக்கினாய்
விடை தேட எனக்கு தெரியவில்லை - தோற்றவன்
அத்துணை நாட்களும் - நீ பெற்ற உன் சார்பு
தீர்ப்பும் வரை நான் தேடி கொண்டிருந்தேன் - உன் கண்களில்
நம் பழைய காதலை !!!

Saturday, February 12, 2011

அய்யா கருணாநிதி ஆப்பு ரெடி

கலைஞர் டிவி இப்போ கலக்கத்தில்
அய்யா சரத்து நீ பெருசு சொல்லி கொடுத்த மாதிரி எத்தனைமுறை அறிக்கை விட்டாலும் ஆப்பு ரெடி தேர்தல் வரும் வரை ஆப்புகள் தொடரும் . தேர்தலில் மொத்த ஆப்பும் மொத்தமா விழும் . அய்யா உங்களுக்கு வாட்டர்லு தயாரா இருக்கு . என்ன அங்கேயும் குடும்பத்தோட இருக்கலாம்.

Monday, November 15, 2010

திருவிழாக்கள் எப்போதும் வருவதில்லை . - நீயும் வந்தாய்
சில நாட்கள் பூத்துறல் சில நாட்கள் மௌன சந்தோசம்
கொலுசு சத்தம் சில நாட்கள் கோப பார்வை சில நாட்கள்
புன்னகை சில நேரம் , புயல் மழை சில நேரம்
என் கனவுகள் உனக்கு புரியாமல் இல்லை- நீயே கலைப்பாய்
என்று தெரியாமல் உன்னிடம் பாதுகாத்தேன் ,
எல்லா நியாயங்களும் உன்னிடம் - என் ஆதங்கங்கள் யாரிடம்?
அனைத்திற்கும் விடை சொல்வாயே- என் கேள்விகளை
எங்கே தொலைத்தாய்?
எல்லா காலத்திலும் நான் காத்திருப்பேன் ,
எப்போதாவது விடை கிடைக்கும் என்று !!!!

Friday, September 24, 2010

அன்பு திருப்பூர் பொது மக்களே !! சற்று சிந்திப்பெர்கள்

Tuesday, July 6, 2010

பயணங்கள்

அன்று பெற்றேன் தொலைதூர பயணம் - அடுத்த
இருக்கையில் நீ - இது
புகை வண்டி பயணம்? - இல்லை
புதிர் வண்டி பயணமே!!!
எதிர் திசையில் விரையும் மரங்கள்
சொல்லாமல் சொல்கின்றன -உன்
எதிர்ப்பை..
ஆனாலும் நான் காத்திருக்கிறேன் -இருவரும்
சேர்ந்தே இறங்குவோம் என்று - இன்று மட்டுமல்ல
இனி எல்லா பயணங்களிலும்!!!

Friday, July 2, 2010

அன்பார்ந்த நேயர்களே ஒரு கவிதை எழுதி அதை உங்கள் பார்வைக்கு கொடுத்து உள்ளேன் விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

நியாயங்கள்

நமக்குள் நிகழ்பவைகளை நீ வெறும்
சம்பசனைகளாக எண்ணுகிறாய் - எனக்கு
உன் மௌனங்களும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன
நம் சந்திப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை
இது உன் எண்ணம் -எனக்கு எல்லாமே
விதிக்கபட்டவையகதான் தெரிகிறது
உன் கசப்புகளுக்கு நீ மருந்து தேடுகிறாய் -நான்
உன்னையே மருந்தாக எடுத்து கொள்கிறேன்
கரையில் நீ - அலைகளின் பயத்தில்
கடலில் நான் - காலத்தின் தேவையில்
காலம் சொல்லட்டும் என் நியாயங்களை !!!