Monday, November 15, 2010

திருவிழாக்கள் எப்போதும் வருவதில்லை . - நீயும் வந்தாய்
சில நாட்கள் பூத்துறல் சில நாட்கள் மௌன சந்தோசம்
கொலுசு சத்தம் சில நாட்கள் கோப பார்வை சில நாட்கள்
புன்னகை சில நேரம் , புயல் மழை சில நேரம்
என் கனவுகள் உனக்கு புரியாமல் இல்லை- நீயே கலைப்பாய்
என்று தெரியாமல் உன்னிடம் பாதுகாத்தேன் ,
எல்லா நியாயங்களும் உன்னிடம் - என் ஆதங்கங்கள் யாரிடம்?
அனைத்திற்கும் விடை சொல்வாயே- என் கேள்விகளை
எங்கே தொலைத்தாய்?
எல்லா காலத்திலும் நான் காத்திருப்பேன் ,
எப்போதாவது விடை கிடைக்கும் என்று !!!!

Friday, September 24, 2010

அன்பு திருப்பூர் பொது மக்களே !! சற்று சிந்திப்பெர்கள்

Tuesday, July 6, 2010

பயணங்கள்

அன்று பெற்றேன் தொலைதூர பயணம் - அடுத்த
இருக்கையில் நீ - இது
புகை வண்டி பயணம்? - இல்லை
புதிர் வண்டி பயணமே!!!
எதிர் திசையில் விரையும் மரங்கள்
சொல்லாமல் சொல்கின்றன -உன்
எதிர்ப்பை..
ஆனாலும் நான் காத்திருக்கிறேன் -இருவரும்
சேர்ந்தே இறங்குவோம் என்று - இன்று மட்டுமல்ல
இனி எல்லா பயணங்களிலும்!!!

Friday, July 2, 2010

அன்பார்ந்த நேயர்களே ஒரு கவிதை எழுதி அதை உங்கள் பார்வைக்கு கொடுத்து உள்ளேன் விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

நியாயங்கள்

நமக்குள் நிகழ்பவைகளை நீ வெறும்
சம்பசனைகளாக எண்ணுகிறாய் - எனக்கு
உன் மௌனங்களும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன
நம் சந்திப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை
இது உன் எண்ணம் -எனக்கு எல்லாமே
விதிக்கபட்டவையகதான் தெரிகிறது
உன் கசப்புகளுக்கு நீ மருந்து தேடுகிறாய் -நான்
உன்னையே மருந்தாக எடுத்து கொள்கிறேன்
கரையில் நீ - அலைகளின் பயத்தில்
கடலில் நான் - காலத்தின் தேவையில்
காலம் சொல்லட்டும் என் நியாயங்களை !!!

Tuesday, June 22, 2010

ஒரு மாநாடு நடத்தினால் அடுத்த தேர்தலில் தி .மு .க . தேறாது என்பது வரலாறு . இது எப்படி கருணாநிதிக்கு தெரியாமல் போனது ? அணையபோகும்விளக்கு தன்திரியை தானே எரிப்பது போல் தன் எதிர்காலத்தை நிர்மூலமாக்குகிறது .