தேதி நினைவில்லை - நம் வழக்கு
நீதி மன்றம் படியேறிய தினம்
என் நினைவடுக்குகளில் தேங்க வில்லை - உன்
ஆவேச குற்றசாட்டுகள்- என் ஊதாரி தனத்தால்
சேமிக்கவில்லை உன் உள்ள குமுறல்களை !!!
கண்களில் வழியும் நெருப்பை கேள்வியாக்கினாய்
விடை தேட எனக்கு தெரியவில்லை - தோற்றவன்
அத்துணை நாட்களும் - நீ பெற்ற உன் சார்பு
தீர்ப்பும் வரை நான் தேடி கொண்டிருந்தேன் - உன் கண்களில்
நம் பழைய காதலை !!!

No comments:
Post a Comment